வெளியீடு எண்: 1770 बी: 24.10.2024
செய்தி வெளியீடு
இந்தியத் தேர்தல் ஆணையம் 01.01.2025-ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு சிறப்பு சுருக்க முறை திருத்தம், 2025-ஐ அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி திரு. சத்ய பிரத சாஹூ, இ.ஆ.ப., அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டத்தை 24.10.2024 அன்று நடத்தினார்.
2. இந்தக் கூட்டத்தில், அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் போது படிவங்களின் தீர்வு மேற்கொள்ளுதல் மற்றும் அதன் அட்டவணை குறித்து தெரிவிக்கப்பட்டது.
3. இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு சுருக்க முறை திருத்தம், 2025-க்கான கீழ்க்கண்ட கால அட்டவணையை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் தேதி மாற்றம்!
தமிழகத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி/ பெயர் மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளும் வாக்காளர் சிறப்பு முகாம்...
நவம்பர் மாதம் 9-10 மற்றும் 23-24 ஆகிய தேதிகளில் நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில்...
தற்போது, நவம்பர் மாதம் 16-17 மற்றும் 23-24 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 29-ம் தேதி வெளியிடப்படும்.
வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் வரும் 29-ம் தேதி முதல் நவம்பர் 28-ம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 6-ம் தேதி வெளியிடப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும், வாக்குச்சாவடி நிலை முகவர்களை (BLA) நியமித்துக் கொள்ளலாம்.
தமிழ்நாடு தேர்தல் ஆணையம் செய்திக்குறிப்பு வெளியீடு!
No comments:
Post a Comment